சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 4,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 39 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல சவரனுக்கு தங்கத்தின் விலை இன்று 240 ரூபாய் உயர்ந்து சவரன் 39, 040 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் 37 ஆயிரம் வரை சரிந்த தங்கத்தின் விலை இரண்டே வாரத்தில் 39 ஆயிரம் ரூபாய்க்கு அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கத்தைப்போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 உயர்ந்து 64 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 64,500 ருபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஆடி மாதத்திலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அடுத்து வரும் முகூர்த்த மாதமான ஆவணி மாதத்திலும் தங்கத்தின் விலை உயருமோ என்று வாடிக்கையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.