அந்நியச் செலாவணி கையிருப்பு 59,304 கோடி டாலராக சரிவு... ரிசர்வ் வங்கி!

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

கடந்த 15-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 59,303.7 கோடி டாலராக சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

டாலர்
டாலர்

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, செப். 15-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 86.7 கோடி டாலா்கள் சரிந்து 59,303.7 கோடி டாலராக உள்ளது. கடந்த 8-ம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 499.2 கோடி டாலா்கள் சரிந்து 59,390.4 கோடி டாலராக இருந்தது.

அக்டோபா் 2021-ல் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது குறைந்து வருகிறது.கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 51.1 கோடி டாலா் சரிந்து 52,591.5 கோடி டாலராக உள்ளது.

டாலா் அல்லாத யூரோ, பவுண்ட், யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.

மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 38.4 கோடி டாலா் குறைந்து 4,400 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 3.2 லட்சம் டாலா் அதிகரித்து 1,809.2 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 40 லட்சம் டாலா் குறைந்து 50.30 கோடி டாலராக உள்ளது என்று தெரிவிக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in