இந்து தமிழ்திசை – காமதேனு மின்னிதழில் ‘சமயம் வளர்த்த சான்றோர்’ என்ற தலைப்பில் வெளியாகி ஆன்மிக அன்பர்களைக் கவர்ந்து வரும் தொடர்.
பன்னிரு வைணவ ஆழ்வார்களுள் ஒருவராக போற்றப்படும் ஆண்டாளின் வாழ்க்கை வரலாற்றை உரைக்கும் இத்தொடர் அனைவரது பாராட்டைப் பெற்றது. ஆண்டாளின் இளவயது அனுபவங்கள், திருப்பாவை, நாச்சியார் திருமொழியின் சிறப்புகள், கண்ணன் மீதான அவரது பக்தி, அவரால் பாடப்பெற்ற தலங்கள் ஆகியன இதில் விளக்கப் பெற்றுள்ளன.