
‘என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்’ எனும் பழைய பாடலில், ‘இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும்?’ என்ற கேள்வியை நாயகன் எழுப்புவான். அதற்கு நாயகி ‘முழுமை பெற்ற காதல் என்றால் முடிவுவரை ஓடிவரும்’ என்று பதில் அளிப்பாள். அப்படி முழுமைபெற்ற காதலர்களாக இருந்தவர்கள் தங்களின் இணையை ‘மரணம்’ எனும் தவிர்க்க முடியாத காரணத்தால் இழக்க நேரும்போது, துடித்துப் போய்விடுவார்கள். பலவிதமான மன இறுக்கத்துக்கு ஆளாவார்கள். இந்தக் காணொலியில் தன்னுடைய மனைவிக்காக ஒரு பாடலை எழுதி, அதற்கான இசையை அமைப்போரிடம் கொடுத்து இசையமைத்து, தகுந்த பாடகரைக் கொண்டு பாடவைத்து, அந்தப் பாடலை சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருக்கிறார் ஒரு மனிதர். மனைவியை இழந்த கணவர்களுக்கு இந்தப் பாடலை அர்ப்பணித்தும் இருக்கிறார்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.